Bagavath Geethai ( பகவத் கீதை) Book in Tamil - Summary
Bhagavad Gita is also called Gita Upanishad. During the war of Mahabharata, when Arjuna refuses to fight, then Shri Krishna preaches to him, and makes him aware of the true knowledge of Karma and Dharma.
These teachings of Shri Krishna have been compiled in a book called “Bhagavad Gita”. When the Koravas and the Pandavas come face to face in the Kurukshetra war, Arjuna refuses just before the war begins. Arjuna gives up all his weapons, and makes up his mind not to fight, but then his charioteer Lord Shri Krishna explains to him, later Lord Shri Krishna preaches the Geeta.
Bagavath Geethai Book in Tamil (பகவத் கீதை தமிழில்)
மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தார். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். இந்த உரையாடல் கருத்துக்களே பகவத் கீதையாகும். இதில் கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்களும், அர்ஜுனனின் சொல்வதாக 57, சஞ்சயன் சொல்வதாக 67, திருதராஷ்டிரன் சொல்வதாக ஒரு ஸ்லோகம் என மொத்தமாக 700 ஸ்லோகங்களையும், 18 அத்தியாயங்களையும் கொண்டதாகும்.
இந்நூலை பிரஸ்தான த்ரயம் என்றும் சொல்வதுண்டு. இதற்கு பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் ஆகியவற்றோடு பகவத் கீதையும் இணைந்து மூன்று அஸ்திவாரங்கள் என்று பொருள்படி பிரஸ்தானத்திரயம் என்று அழைக்கப்படுகிறது.
Bagavath Geethai Teaching Lession
- பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.
- பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.
- ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.
- அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.
- யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல்.
- எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
- எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
- எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
- உன்னுடையதை எதை இழந்தாய் என்று நீ அழுகிறாய்?
- எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
- எதை நீ படைத்தாய், அது வீணாவதற்கு?
- எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
- எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
- எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது
- மற்றொரு நாள் அது வேறு ஒருவருடையதாகும்.
You can download the Bagavath Geethai Book in Tamil PDF using the link given below.