Kamarajar History Tamil
Kamarajar History PDF in Tamil read online or download for free from the link given at the bottom of this article.
Kumaraswami Kamaraj, popularly known as Kamarajar was an Indian independence activist and politician who served as the Chief Minister of Madras State from 13 April 1954 to 2 October 1963. Kamarajar was the founder and the president of the Indian National Congress (Organisation), widely acknowledged as the “Kingmaker” in Indian politics during the 1960s.
Kamarajar was the Member of Parliament, Lok Sabha during 1952–1954 and 1969–1975. He was known for his simplicity and integrity. He played a major role in developing the infrastructure of the Madras state and worked to improve the quality of life of the needy and the disadvantaged. இவரது தந்தையின் பெயர் குமாரசாமி நாடார் மற்றும் இவரது தாயாரின் பெயர் சிவகாமி அம்மையார் ஆகும். காமராஜரின் சிறு வயதிலேயே அவரது தந்தை காலமாகிவிட்டார். இதனால் காமராஜர் தனது தாய்மாமா கருப்பையா நாடாரின் பராமரிப்பிலேயே வளர்ந்து வந்தார்.
Kamarajar History in Tamil
காமராஜர் குடும்ப சூழல் காரணமாக தனது ஆறாம் வகுப்பிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். பின்னர் அவரது மாமா கருப்பையா நாடார் நடத்திவந்த துணிக்கடையில் பணி செய்து வந்தார். துணிக்கடையில் வேலை பார்க்கும் போதே செய்தித்தாள்களை படிக்கும் பழக்கம் காமராஜருக்கு ஏற்பட்டது. இதனால் விடுதலை போராட்டத்திலும், அரசியலிலும் காமராஜருக்கு இளம்வயதிலேயே ஈடுபாடு அதிகரித்தது. அருகில் நடக்கும் அனைத்து விடுதலை இயக்க கூட்டங்களுக்கும் தவறாமல் சென்று விடுவார். பி. வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாண சுந்தரனார், சத்தியமூர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் சொற்பொழிவுகள் அவரை மேலும் விடுதலைப் போராட்டத்தின் மீது ஈர்த்தன. இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார் காமராஜர்.
திருவனந்தபுரம் சென்ற காமராஜர் :
ஆனால் காமராஜர் விடுதலை இயக்கத்தில் ஈடுபடுவதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. எனவே அவரை திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். திருவனந்தபுரத்தில் அவரது இன்னொரு தாய்மாமா வைத்திருந்த காய்கறி கடையில் பணிபுரிந்தார் காமராஜர். அங்கேயும் அவரது விடுதலை போராட்ட ஈடுபாட்டை காமராஜர் குறைத்துக் கொள்ளவில்லை. கேரளாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரக போராட்டத்திற்கு காந்தியடிகள் வருகை தந்து போராட்டத்தை வெற்றி பெறச் செய்தார். அந்த போராட்டத்தில் காமராஜரும் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் துறவி :
விருதுநகரில் அவரது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருந்ததை அறிந்த காமராஜர் மீண்டும் திருவனந்தபுரத்திலிருந்து விருதுநகருக்கு வந்து சேர்ந்தார். குடும்பத்தினர் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியும், காமராஜர் அதனை முற்றிலுமாக மறுத்துவிட்டார். இந்திய நாடு விடுதலை பெறும் வரையில் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்பதனை அவர்களிடம் தெரிவித்து முழுநேரமாக தேச விடுதலை போராட்டத்திலேயே தன்னை இணைத்துக் கொண்டார். நாட்டிற்கு விடுதலை கிடைத்த பிறகும் கூட அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
You can download the Kamarajar History PDF using the link given below.
