பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை Tamil
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒத்த தன்மையானது) (குறள் 972) பிறந்த பின்னர்யாதும் ஊரே யாவரும் கேளீர் (to us all towns are one, all men ourkin) (-purananuru) உண்பது நாழி உடுப்பது இரண்டே ( மக்கள் அனைவரும் உண்பது நாழி (ukuran) அளவு ஆண்களும் பெண்களும் உடுப்பது இரண்டே ஆடைகள்) (purananuru)
உறைவிடம்(இருப்பிடம்) என்பது ஒன்றே என உரைத்து(புகழ்) வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம் தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும் (life’s good comes not from other’s. gifts nor ill) (purananuru) நன்மொழியே நம் பொன் மொழியாம்போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே அமைதி வழி காட்டும் அன்பு மொழிஅய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம் (திருக்குறள்) செம்மொழியான (பழமையான) தமிழ் மொழியாம்ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ஒல்காப் புகழ் (முதலிடம்) தொல்காப்பியமும் (tamil grammer) சிந்தாமணியுடனே( சீவகசிந்தாமணி). வளையாபதி, குண்டலகேசியம் (five ஒப்பற்ற (அழகு) குறள் கூறும் உயர் பண்பாடு ஒலிக்கின்ற சிலம்பும் (சிலப்பதிகாரம்), மேகலையும் (மணிமேகலை)
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை
வள்ளுவன் இயற்றிய உலகப் பொதுமறையில் பெருமை என்ற அதிகாரத்தின் 2 வது குறள் –
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” !!
பிறப்பினால் அனைவரும் ஒருவரே. பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உலகிற்கு உரக்க உரைத்திற்று.
ஆனால் பிறப்பில் பேதம் கற்பிக்கும் சாதி தமிழ்ச் சமூகத்தில் நுழைந்து நம்மை பிளவுபடுத்தியது. சாதி என்பது ஏற்றத்தாழ்வுகள் கொண்ட ஒரு சமூக அவலம், அது ஒரு உரிமை மீறல், பாகுபடுத்தி நடத்துதல், ஒரு வன்முறை என்பதை பலரும் உணரவேயில்லை. சாதிய படிநிலையில் மேல் சாதி உயர்ந்த சமூக நிலையும், கீழ் சாதி தாழ்ந்த சமூக நிலையும் கொண்டவர்களாக கருதப்படுகின்றார்கள். இந்நிலையான வேறுபாட்டை நிலைநாட்டும் வண்ணம் பல்வேறு சமூக மரபுகளும் சடங்குகளும் அம்மக்களை முட்டாளாக்கி வைத்திருக்கின்றது.
இன்று தமிழர்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளனர், அக்காலத் தமிழர் கடல் கடந்து வாணிபம் செய்தனர், இக்காலத் தமிழர் கணினித் துறையில் பணியாற்றுகின்றனர். ஆனால் சாதி எனும் பிறப்பினால் பேதம் கற்பிக்கும் இழிநிலையை இந்த தகவல் தொழில் நுட்பப் புரட்சிக் காலத்திலும் விடுவதாக இல்லை.
You can download the பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை PDF using the link given below.