தெய்வத்தின் குரல் பாகம் 5 Tamil
மீமாம்ஸகர்களின் ப்ரதான புருஷராயிருந்த மண்டன மிச்ரர் ஆசார்யாளின் சிஷ்யரானது, வேதாந்த மதத்தின் புனருத்தாரணத்துக்குப் பெரிய பலம் கொடுத்தது.
ஆனாலும் மநுஷ ஸ்வபாவம் எத்தனை பெரியவர்களையும் எப்படிக் கொஞ்சமாவது ஆட்டிவைத்து விடுகிறது என்று தெரிவிப்பதுபோல, ஆசார்யாளின் மற்ற சிஷ்யர்களே அவரை (ஸுரேச்வராசார்யாளை)க் கொஞ்சம் ஸந்தேஹக் கண்ணோடு பார்த்ததாக ‘சங்கர விஜய’ங்களில் இருக்கிறது. அவர் ஆசார்யாளின் சாரீரக பாஷ்யத்துக்கு (ப்ரஹ்ம ஸ¨த்ரத்துக்கு ‘சாரீரக மீமாம்ஸா’என்றும் பெயராதலால் ஆசார்யாளின் ஸ¨த்ர பாஷ்யம் ‘சாரீரக பாஷ்யம்’என்றும் கூறப்படும். சரீரத்திலிருந்து பிரித்து அதற்கு உட்பொருளான ஆத்மாவைச் சொல்வதால் ‘சாரீரகம்’.) வார்த்திகம் எழுத ஆரம்பித்ததாகவும், அப்போது மற்ற சிஷ்யாள், ‘என்ன இருந்தாலும் இவர் ரொம்பவும் தீவ்ரமான பூர்வ மீமாம்ஸகராக இருந்தவர்தானே?வாதத்தில் தோற்றுப் போனதால் வழியில்லாமல் ஆசார்யாளிடம் சிஷ்யராகி விட்டாலும், அந்தரங்க பூர்வமாக அத்வைத வேதாந்தத்தில் இவருக்கு ஈடுபாடு இருக்குமோ இருக்காதோ?நம்மெல்லாம் மாதிரி ப்ரஹ்மசர்யத்திலிருந்தே ஸந்நியாஸத்திற்கு வராமல் பஹ§காலம் குடும்ப வாழ்க்கையிலிருந்த இவருக்குள் ஞான தத்வம் ஏறியிருக்குமா?அதனாலே honest-ஆக எழுதாமல், தன்னுடைய பழைய ஸித்தாந்தத்துக்கே இடம் கொடுக்கும்படி ஏதாவது ‘ட்விஸ்ட்’, ‘கிஸ்ட்’பண்ணி எழுதிவிடப்போகிறாரே!’என்று ஆசார்யாளிடம் சொன்னார்களாம், ஆசார்யாள் மனஸில் ஒன்றை நினைத்துக் கொண்டு, ஆனால், சும்மாயிருந்துவிட்டார். ஸுரேச்வராசார்யாள் காதுக்கே விஷயம் எட்டி அவர் ‘நாம் எழுத வேண்டாம்’என்று இருந்துவிட்டார்.
Deivathin Kural Vol 5 or part five book free download in tamil pdf format by link provided below
Thank you very much for making the treasure so easily available
Thank you very much for making the treasure so easily available. Is there any I can make some payment for your seva?
You need not to send any payments, just enjoy reading your stuff…After all this is our motto at instaPDF to make the treasures like this easily available for everyone, for free